ஶ்ரீவைகுண்டம், ஏப்ரல் 08, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி கட்சிகளின் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி - க்கு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கருங்குளம், செய்துங்கநல்லூர் பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், நாடார் பேரவை தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ்குமார் திமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் குமார், கிளைச்செயலாளர் முத்துசாமி, ஊராட்சி மன்ற தலைவர் பார்வதிநாதன், கரையடியூர் செயலாளர் மாரியப்பன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் சகாயராஜ் சமத்துவ மக்கள் கழகம் கருங்குளம் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கார்த்திக், பால்துரை, மூர்த்தி மாவட்ட துணை செயலாளர் சூசைமுத்து மாவட்ட தொண்டரணி செயலாளர் முத்துச்செல்வம் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார் மாநகர அவைதலைவர் மதியழகன் மாநகர வார்டு செயலாளர் சண்முககுமார், செல்வராஜ், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக