தூத்துக்குடி - மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 16 ஏப்ரல், 2024

தூத்துக்குடி - மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி.

தூத்துக்குடி மாவட்டம், ஏப்ரல் 15,
தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.


தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி இன்று (15.04.2024) கொடியசைத்து துவக்கி வைத்தார்.


எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024-ன்போது வாக்குப்பதிவின் முக்கியத்துவம் மற்றும் 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் வகையில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SVEEP (Systematic Voters Education and Electoral Participation) எனப்படும் சிறப்பு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது. 


அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள், முதல் முறை வாக்காளர்கள் ஆகியோர் வாக்காளர்களிடையே வாக்குப்பதிவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


இன்று 15.04.2024 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. 


பேரணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.


இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/