நாசரேத், ஏப்ரல்.16.நாசரேத் பேரூராட்சி பெத்தானியா நகர் பகுதியில் உள்ள காட்டுநாயக்கர் காலனி குடியிருப்பு மக்கள், தங்கள் குடியிருப்பு பகுதியில் கருப்புகொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் புறக்கணிக்க போராட்ட அறிவிப்பு செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஏரல் வட்டாட்சியர் கோபால் சம்மந்தப்பட்ட பகுதி மக்களை அழைத்து பேசி பேரூராட்சி நிர்வாகம் சார்பாக மாநில பேரிடர் நிதியிலிருந்து சாலை வசதி செய்து தரப்படும் என்றும், 2 நாட்களில் குடிநீர் குழாயில் உள்ள அடைப்பு சரி செய்து குடிநீர் கொடுக்கபடும் என்றும், வடிகால் வசதி செய்து கொடுக்கவும் முடிவு செய்யபட்டதின் பேரில் சுமூக முடிவு ஏற்பட்டு கருப்பு கொடிகளை அப்புறப்படுத்தி தேர்தலில் வாக்களிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
பேச்சு வார்த்தையில் விடுதலை சிறுத்தை கட்சி தொகுதி செயலாளர் திருவள்ளுவன், ஊர் தலைவர் கணேசன், வருவாய் ஆய்வாளர் மகாதேவன், கிராம உதவியாளர் கண்ணன் மற்றும் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக