மதுரையில் சமூக நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்ட பிரமாண்ட அசைவ உணவு திருவிழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 4 ஜனவரி, 2025

மதுரையில் சமூக நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்ட பிரமாண்ட அசைவ உணவு திருவிழா


மதுரையில் சமூக நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்ட பிரமாண்ட அசைவ உணவு திருவிழா


70 ஆடுகள்., 2500 கிலோ அரிசியில் சாதம் வடித்து கரும்பாறை முத்தையா சாமிக்கு படைத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  ஆண் பக்தர்கள் மட்டும் கலந்து கொண்டு அசைவ உணவை ருசித்தனர்.



மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள அனுப்பபட்டி கிராமத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் கரும்பாறை முத்தையா சுவாமி  உள்ளது இக்கோவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ உணவு திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் பாரம்பரிய முறைப்படி ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர்.


ஆண்டுதோறும்  விழாவிற்காக பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் நிறைவேறியதற்காக கருப்பு ஆடுகள் மட்டுமே முத்தையா சாமிக்கு வழங்குவார்கள்.பக்தர்கள் கோவிலில் விட்டுச் செல்லும் ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும்போது கருப்பசாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்து அந்த ஆடுகளை பொதுமக்கள் விவசாயிகள் யாரும் விரட்டமாட்டார்கள். விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக கிராமப்புறங்களில் சுற்றி திரியும் ஆடுகளை எல்லாம் ஒன்று சேர்த்து சுவாமிக்கு பலியிடப்பட்டு அசைவ அன்னதான உணவு பக்தர்களுக்கு வழங்கப்படும்.


இந்த நிலையில் ஆண்டு தோறும் தை மாதம் நடைபெறும் முத்தையா சுவாமி கோவில் அசைவ உணவு திருவிழா இன்று காலை தொடங்கிய நிலையில் கோவிலில் சாமிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை தொடங்கிய பின்னர், நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 70 ஆடுகள் பலியிடப்பட்டு 2500 கிலோ அரிசியை பயன்படுத்தி சாதத்துடன் உணவாக சமைக்கப்பட்டது. சமைக்கப்பட்ட சாதத்தை ஒரு இடத்தில் மலை போல் குவித்து வைத்து ஆட்டு இறைச்சியால் அசைவ குழம்பு சாமிக்கு படைத்து பூஜை செய்வார்கள். அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும்.


இந்த கறி விருந்தில் கரடிக்கல், அனுப்பப்பட்டி, மட்டப்பாறை, சொரிக்காம்பட்டி, பெருமாள் கோவில் பட்டி,செக்கானூரணி, மேல உரப்பனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர். சமைக்கப்பட்ட உணவு அனைவரும் வரிசையில் அமர்ந்த பின்பு இலைகள் போடப்பட்டு அதன் பின்னர் சாதம் அதற்கு பிறகு கறி குழம்பு என வரிசையாக  பரிமாறப்பட்டு விருந்து விமர்ச்சையாக நடைபெற்றது.  இதனை சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். ஒரு வாரத்திற்கு பின்பு இலைகள் காய்ந்த பிறகே பெண்கள் கோவிலிக்கு சாமி தரிசனத்திற்கு வருவார்கள்.


இந்த கறிவிருந்தில் திருமங்கலம்., சொரிக்கம்பட்டி., பெருமாள் கோவில்பட்டி., கரடிக்கல்., மாவிலிபட்டி., செக்கானூரணி., சோழவந்தான்., கருமாத்தூர்., செல்லம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆண் பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவானது சமூக நல்லிணக்கத்திற்காக நடத்தப்படுகிறது. குழந்தை வரம், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியத்திற்காக நேர்த்திக்கடனுக்காக ஆடுகளை கோவிலுக்கு நேர்த்திகடன் செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த உணவு திருவிழாவில் ஜாதி மத பேதமின்றி அனைவரும் கலந்து கொள்ளலாம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.


தமிழக குரல் செய்திக்காக
செய்தியாளர் R.வினோத் பாபு திருமங்கலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad