அயனாவரம் எஜிகேஷனல் டிரஸ்ட், நீலகிரி எஜிகேஷனல் டிரஸ்ட் மற்றும் தானிஷ் அகமதுஇன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி கோவை இணைந்து உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மாபெரும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செளவுந்தர்ராஜன் தானிஷ் அகமது இன்சிடியூட் ஆஃப் டெக்னாலஜி முதன்மை நிர்வாக அதிகாரி தமிஷ்அகமது , முதல்வர் முனைவர் கே.ஜி பார்த்திபன் சுரேஷ் ரமணா மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பு தலைவர், பழங்குடியினர் கலாச்சார பாதுகாப்பு அமைப்பின் தலைவர் நோர்தேகுட்டன், தானிஷ் அகமது கல்லூரியின் எ.ஒ முகமது ஜாபர் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் 60 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர். மேலும் நீலகிரி மாவட்டத்தில் சமூகப் பணியில் தன்னார்வலர் தொண்டு நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன மற்றும் சிறந்த ஆசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவின் ஏற்பாட்டினை அயனாவரம் எஜிகேஷனல் டிரஸ்ட் செய்திருந்தது. நிகழ்ச்சியில் யூஜின் பிராங்கோ அனைவரையும் வரவேற்றார். தில்ஷாத் நன்றி கூறினார். நிகழ்ச்சியை தமிழியக்கம் மாவட்ட செயலாளர் புலவர் இர.நாகராஜ் தொகுத்து வழங்கினார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக