சிவகங்கையில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான திட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற 'தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான திட்ட விளக்க கூட்டத்தில்' கலந்து கொண்ட மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் திட்ட பயனாளி பெருமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், திட்ட பயணாளிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக