நாசரேத் காவல் துறையினருக்கு சாத்தான்குளம் டி.எஸ்.பி பாராட்டு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 மார்ச், 2025

நாசரேத் காவல் துறையினருக்கு சாத்தான்குளம் டி.எஸ்.பி பாராட்டு.

நாசரேத் காவல் துறை மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பாராட்டு.

சமீபத்தில் நாசரேத் சுற்று வட்டார பகுதிகளில் நடந்த, வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை, விரைவாக தேடி பிடித்து வழக்குகளை சிறப்பாக விசாரித்த போலீசாருக்கு சாத்தான்குளம் டிஎஸ்பி பாராட்டு.

நாசரேத் பகுதியில் நடந்த வழிப்பறி சம்பவத்தில் குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அசோக் என்ற குற்றவாளியை சிறப்பு உதவி ஆய்வாளர் ஐசக் மகாராஜா மற்றும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். 

இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி சாத்தான்குளம் சுபக்குமார் குற்றவாளியை பிடித்த போலீசாரை வெகுமதி வழங்கி பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad