ஸ்ரீவைகுண்டம் மார்ச் 6.நவதிருப்பதி கோவில்களில் இரண்டாவது கோயில் நத்தம் விஜயாசன பெருமாள் கோயிலாகும். மாசி பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு நேற்று புஷ்பாஞ்சலி சேவை நடந்தது.
கடந்த பிப்ரவரி 22ந்தேதி நத்தம் கோயிலில் கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோற்சவம் துவங்கியது. நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம் 9 மணிக்கு திருமஞ்சனம். 10 மணிக்கு திருவாராதனம்.
பின்னர் 10.30 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் சேவை திருவாய்மொழி பிள்ளை திருமலாச்சாரி சீனிவாசன் சம்பத். பட்சி ராஜன் வேங்கட கிருஷ்ணன் வீரராகவன் ஆகியோர் சேவித்தனர்.
தொடர்ந்து மல்லிகை. ரோஜர். வாடாமல்லி. பட்டு ரோஸ். துளசி, பச்சை, செவ்வரளி, வெள்ளை அரளி போன்ற புஷ்பங்களால் துவாதச நாமம் சொல்லி அர்ச்சகர்கள் ராஜகோபாலன கண்ணன் கிருஷ்ணன் சுதர்சன் ஆகியோர் அர்ச்சனை செய்தனர்.
இந்நிகழ்வில் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி.சீனிவாசன். தேவராஜன். கண்ணன் அறங்காவல்குழுத் தலைவர் அருணாதேவி கொம்பையா மாரியம்மாள் சண்முகசுந்தரம் முருகன் முத்துகிருஷ்ணன் பாலகிருஷ்ணன் உறுப்பினர்கள் அருணா தேவி. மாரியம்மாள் முருகன் பாலகிருஷ்ணன் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக