மத்திய அரசை கண்டித்து சிறு வணிகர் களின் வாழ்வாதாரத்தை அழித்திட்ட நிறுவனங்களை தடை செய்யக்கோரி போராட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஏப்ரல், 2025

மத்திய அரசை கண்டித்து சிறு வணிகர் களின் வாழ்வாதாரத்தை அழித்திட்ட நிறுவனங்களை தடை செய்யக்கோரி போராட்டம்!

மத்திய அரசை கண்டித்து சிறு வணிகர் களின் வாழ்வாதாரத்தை அழித்திட்ட நிறுவனங்களை தடை செய்யக்கோரி போராட்டம்!


அமேசான் ,டி மார்ட், பில்லிங் கிட், ஜிப்ரோ, போன்ற நிறுவனங்களுக்கு அதிக தள்ளுபடி விலையில் சப்ளை செய்து பாரம்பரிய மளிகை வணிகர்களை முதுகில் குத்தும் மத்திய அரசை கண்டித்து திருப்பத்தூர் நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது.


திருப்பத்தூர் , ஏப்  22  -

 திருப்பத்தூர்  மாவட்டம் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் அமேசான் ,டி மார்ட், பில்லிங் கிட், ஜிப்ரோ, போன்ற நிறுவனங்களுக்கு அதிக தள்ளுபடி இலையில் சப்ளை செய்து பாரம்பரிய மளிகை வணிகர்களை முதுகில் குத்தும் மத்திய அரசை கண்டித்தும் தடையில்லா காமேர்சை அனுமதித்திருக்கும் எஃப் எம் சி ஜி நிறுவனங்களை கண்டித்து போராட்ட பதாகைகள்  ஏந்தி திருப்பத்தூர் நுகர்வோர் உணவு தரவு சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது இதில் தலைவர்  ஏ செந்தில் முருகன்செயலாளர் ஏ ரவிச்சந்திரன் கௌரவ தலைவர் வி தீர்த்தமலை பொருளாளர் எஸ் சூரிய குமார் ராஜா ராணி தாமோதரன். பிரதமர் நரேந்திர மோடி அவர்களே சிறி வணிக களின் வாழ்வாதாரத்தை அளித்துவிட்ட அமேசான்,வி மார்ட், போன்ற நிறுவனங் களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினார்கள் மேலும் இதில் திருப்பத் தூர் முகப்பொருள் விநியோகிஸ்தான  சங்கத்தின் சார்பாக 50-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்


 தமிழக குரல் செய்தியாளர்
 மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad