இம் முகாமினை திருமறையூர் சேகர தலைவர் ஜான் சாமுவேல் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். இம்மருத்துவ முகாமில் சர்க்கரை அளவ கண்டறிதல், ரத்த அழுத்தம், இசிஜி மற்றும் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
திருநெல்வேலி அருணா கார்டியோ கேர் மருத்துவமனையில் இருந்து மருத்துவர் ராமதாஸ் தலைமையில் மருத்துவ குழுவினர் பங்கு பெற்று பற்பல சேவைகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஒய் எம் சி நிர்வாகத்தினர் சாமுவேல் ராஜ், எபனேசர், புஷ்பராஜ், ஆம்ஸ்ட்ராங், லேவி அசோக் சுந்தர்ராஜ், இம்மானுல், ஜட்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலிருந்து திரளானோர் பங்கு பெற்று இலவச சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நாசரேத் ஒய் எம் சி ஏ செய்திருந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக