உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நேரில் சென்று பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்ற சட்டமன்ற உறுப்பினர்
முதல்வரின் மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் நோக்கில் நடைபெற்று வரும் உங்களுடன்_ஸ்டாலின் முகாமின் கீழ், இன்று கள்ளப்புளியூர் கிராமத்தில் சிறப்பான முகாம் ஒன்று நடைபெற்றது.இந்த முகாமிற்கு, சட்டமன்ற உறுப்பினர்.மஸ்தான் நேரில் பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்றுக்கொண்டார்.
அந்த மனுக்களை தொடர்புடைய துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.இந்த முகாமின் வாயிலாக பொதுமக்கள் தங்களது பிரச்சனைகள், கோரிக்கைகள் மற்றும் தேவைகளை நேரடியாக தெரிவித்து, அரசு உதவிகளைப் பெறும் வாய்ப்பு பெறுகிறார்கள்.
பொதுமக்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாம்களை முழுமையாகப் பயன்படுத்தி, அரசு வழங்கும் நலத்திட்டங்களிலிருந்து முழுமையான பயனை பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
தமிழககுரல் செய்திகளுக்காக
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.
அருள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக