மீனூர்மலை பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை பக்தர்கள் தரிசனம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 20 செப்டம்பர், 2025

மீனூர்மலை பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை பக்தர்கள் தரிசனம் !

மீனூர்மலை பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை பக்தர்கள் தரிசனம் !
குடியாத்தம் , செப் 20 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மீனூர்மலையில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை முதல் ஐந்தாம் சனிக்கிழ மை வரை குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழ மை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.முதல் சனிக் கிழமை முன்னிட்டு வெங்கடேச பெரு மாள் மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் குடியாத் தம் அடுத்த மீனூர்மலை வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு மூலவர் ராஜா அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் அதேபோல் பத்மாவதி தாயார் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் இதற் கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி  விழா குழுவினர், மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர் விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது சாமி தரிசனம் செய்து வரும் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோசங்களை எழுப்பி பக்தர்கள் சாமி தரிசனம் செய் தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad