விஸ்வபிரம்ம சுவாமி வீதி உலா விஸ்வ கர்ம மடாயத்தின் இளைய சுவாமிகள் சிவ.சிவஞானசேகரன் தொடக்கம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 18 செப்டம்பர், 2025

விஸ்வபிரம்ம சுவாமி வீதி உலா விஸ்வ கர்ம மடாயத்தின் இளைய சுவாமிகள் சிவ.சிவஞானசேகரன் தொடக்கம் !

 விஸ்வபிரம்ம சுவாமி வீதி உலா விஸ்வ கர்ம மடாயத்தின் இளைய சுவாமிகள் சிவ.சிவஞானசேகரன்  தொடக்கம் !
வேலூர் , செப் 18 -

வேலூர் மாவட்டம் பேரிப்பேட்டை விஸ்வ கர்ம சமூகத்திற்கு பாத்தியப்பட்ட அருள் மிகு ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோயில் வளாகத்தில் விஸ்வபிரம்ம தின விழா மற்றும் விஸ்வ பிரம்ம மஹா யாகம் நிகழ்ச்சி இன்று 17.09.2025 சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தின் வேலூர் மாவட்ட தலைவர் வி.விசுவநாதன் ஆச்சாரி அவைத் தலைவர் எம்.ரவி செயலாளர் ஜெ. சீனிவாசன் பொருளாளர் கே.ஜெகநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.  
வேலூர் மாநகர தலைவர் எஸ்.சக்திவேல் செயலாளர் எஸ்.அச்சுதன் பொருளாளர் எஸ்.யுவராஜ் மாநில செயலாளர் எம்.பிச்சாண்டி  வெள்ளி வெங்கடேசன் ஆச்சாரி, எஸ்.பாண்டியன் ஆச்சாரி எஸ்.கார்த்திகேயன் ஆச்சாரி, பி.சசிகுமார் ஆச்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலய அர்ச்சகர் ஜோதி முரு காச்சாரியார் தலைமையில் எம்.தியாக ராஜன், கே.கிருபாகரன், பி.ராவனேஸ் வரன், பி.பார்த்திபன், ஆர்.சீனிவாசன் ஆகிய அர்ச்சகர்கள் அபிஷேகமும் ஆராதனையும் செய்தனர்.  அலங்கார திலகம் என்.ராமு ஆச்சாரி சுவாமிக்கு அலங்காரம் செய்து வைத்தார்.
சீனந்தல் மடாலயம் விஸ்வகர்ம மடாயத்தின் இளைய குருஸ்வாமிகள் சிவ.சிவஞானசேகரன் சுவாமிகள் விஸ்வகர்மா ஜெயந்தி குறித்து சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்.  பின்னர் விஸ்வபிரம்ம சுவாமி திருவீதி உலா வினை தொடக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விஸ்வகர்மா நண்பர்கள் நல சங்கத்தின் தலைவர் சி.தேஜோமூர்த்தி, செயலாளர் செ.நா.ஜனார்த்தனன்  தலைமை நிலைய செயலாளர் சு.சோமாஸ்கந்தன் காளிகாம்பாள் ஆலய திருப்பணி அபிவிருத்தி டிரஸ்ட் தலைவர் வி.வெங்கடேசன், செயலாளர் எம்.ஞானசம்பந்தன், பொருளாளர்  ஆர்.ஜீவரத்தினம், கிருஷ்ணகுமார், நகைவேலை ஜெ.வெங்கடேஷ்ஆச்சாரி, மகாதேவமலை கே.நாகராஜ் சுவாமிகள், வி.ஆர்.சரவணன், கே.ஜி.சண்முகம் ஆச்சாரி உள்ளிட்ட பலர் பங்கேற்று விஸ்வகர்மா ஜெயந்தி விழாவில் அருள் ஆசி பெற்றனர். விழாவில் கொடை வள்ளல்கள், உபயதாரர்கள் கே.நாகரா ஜன், ஆர்.மூர்த்தி, டி.எஸ்.பாபு ஆம்பூர் எம்.ஜனார்த்தனன், ஜெயக்குமார், கே.ஜி.சண்முகம், ஜெ.சீனிவாசன், கே.ஜெகன்நான், எஸ்.சக்திவேல், எஸ்.அச்சுதன், எஸ்.யுவராஜ் உள்ளிட் டோருக்கு சால்வை அணிவித்து பாராட்டப்பட்டனர்.இவ்விழாவினை தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம், கைவினைஞர்கள் தொழிற்சங்க பேரவை,  அருள்மிகு காளிகாம்பாள் ஆலய திருப்பணி அபிவிருத்தி டிரஸ்ட், ஆடிவெள்ளி பால்குட விழா கமிட்டியினர், மாநகர துணை நிர்வாகிகள், விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்க நிர்வாகிகள், தேவஸ்தான அமாவாசை ஊஞ்சல் சேவை கமிட்டியினர் இணைந்து செய்தனர்.விஸ்வபிரம்ம சுவாமி திருவீதி உலா பேரி காளிகாம்பாள் கோயில் தெரு, பேரி சுப்பிரமணியசுவாமி கோயில் தெரு, கே.வி.எஸ்.செட்டி தெரு, காந்திரோடு, பேரி பக்காளி தெரு, மெயின் பஜார் வழியாக சென்று மீண்டும் ஆலயத்திற்கு வந்தடைந்தது 

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad