வேலூரில் ஜாக்டோ-ஜியோ பேரமைப்பி னர் நவம்பர்-18ல் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று ஆர்ப்பாட்டம்!
வேலூர் மாவட்டம் ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் அனைவருக்கும் மீண்டும் நடை முறைபடுத்த கோருதல், 23.08.2010க்கு முன்னதாகப் பணியில் சேர்த ஆசிரியர் களுக்கு டெட் தேர்விலிருந்து விலக்கறி த்து ஆசிரியர்களை பாதுகாத்திட கோரு தல், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கோருதல், சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பணியாற்றும் ஆசிரியர் பணியாளர் அனைவருக்கும் பணிநிரந்தரம் செய்ய கோருதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி ஒரு நாள் அடை யாள வேலைநிறுத்த போராட்டத்தில் 18.11.2025ல் பங்கேற்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.வேலூர் மாவட்ட உயர்மட்டக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கள் ட்டி.டி.ஜோஷி, எம்.ஜெயகாந்தன், ஆ.ஜோசப்அன்னையா, ஜி.சீனிவாசன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன், முகமது ஷாநவாஸ் அக்ரி.இராமன், ஜி.கோபி, துரை.கருணாநிதி, தலைமையாசிரியர் எம்.சினேகலதா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர், மாவட்ட உயர்மட்டக்குழு நிர்வா கிகள் எம்.எஸ்.செல்வகுமார், வாரா, ஆர்.ஜெயக்குமார், ஜி.டி.பாபு, க.குண சேகரன், பெ.இளங்கோ, அல்போன்ஸ்கிரி, கவியரசன், சங்கர், தனசேகர், மலர்விழி, சபிதா, ஜெயபிரகாஷ், திருக்குமரன் உள்ளிட்டோர் பேசினர்.
கோரிக்கைகள்
1.பங்கேற்பு புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத் தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
2.ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பினைக் காரணம் காட்டி 23.08.2010க்கு முன்னதாகப் பணியேற்ற ஆசிரிர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து டெட் தேர்விலிரு ந்து விலக்களித்து ஆசிரியர்களை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் 3.காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை உடனடியாக வழங்கிட கோருகின்றோம்.
4.இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளித்தலைமையாசிரியர்களுக்கும் உடற்கல்வி ஆசிரியர்களக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.
5.முதுகலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறை களிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் ஊர்த்தி ஓட்டுநர்கள், ஆகியோடருக்கான ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும். கல்லூரி பேராசிரியர்கள் நிலுவயிலுள்ள பணி மேம்பாடு உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும் மேல்நிலைப்பள்ளிகிளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களைப் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும்.
6.சிறப்பு காலமுறை ஊதியம் பெற்ற வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், எம்.ஆர்.பி.செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், ஆகியோருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் பகுதிநேர ஆசிரியர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
7.அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள 6 லட்சத்திற்கு மேற்பட்ட பணி இடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தனியார் வெளிமுகமை ஒப்பந்தம், தற்காலிகம், உள்ளிட்ட முறைகளை கைவிட்டு சமூக நீதி காத்திட நிரந்தர பணியிடங்களில் நிரப்பிட வேண்டும்.
8.21-மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள் ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்
9.2003 முதல் 2005 வரை தொகுப்பூதியத் தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்டு த்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.
10.சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தினை முறைப்படுத்த வேண்டும
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக