ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் பங்கேற்பு !
குடியாத்தம் , பிப் 17 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உள்ளி ஊராட்சியில் இன்று காலை கிராம சபை சிறப்பு கூட்டம் நடைபெற்றது
கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வி ஜெய்சங்கர் தலைமை தாங்கினார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழு மலை முன்னிலை வகித்தார் இதில் அப் பகுதியில் உள்ள பொதுமக்கள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கு வீடுகள் வழங்க கோரிக்கை மனு அளித்தனர். இதில் கிராம வளர்ச்சிக்காக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது இறுதி யில் துணைத் தலைவர் வாசுதேவன் நன்றி கூறினார். இதேபோல். வளத்தூர் . ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா சேட்டு தலைமை தாங்கினார்
இந்நிகழ்ச்சிகள் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகள் கேட்டு கோரிக் கை மனுக்கள் அளித்தனர் இறுதியில் ஊராட்சி செயலாளர் ரேவதி நன்றி கூறினார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக