பழங்குடியின மக்கள் பள்ளி மாணவ மாணவி நோட்டு புத்தகங்கள் வழங்கிய இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 7 ஜூன், 2026

பழங்குடியின மக்கள் பள்ளி மாணவ மாணவி நோட்டு புத்தகங்கள் வழங்கிய இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்

பழங்குடியின மக்கள் பள்ளி மாணவ மாணவி நோட்டு புத்தகங்கள் வழங்கிய இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் 
 
குடியாத்தம் . ஜூன் 7
வேலூர் மாவட்டம், குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட காளியம் மன்பட்டி சாமியார்மலையில் உள்ள அன்னை சோனியா காந்தி நகரில் வசிக் கும் பழங்குடியின குடும்பங்களைச் சார்ந்த 35 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
காளியம்மன்பட்டி இளைஞர்கள் சார்பில் ஆண்டுதோறும்  எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி,  காளியம்மன்பட்டி அன்னை சோனியா காந்தி நகரில் வசிக்கும் பழங்குடியின குடும்பங்களை சேர்ந்த 35 மாணவர்களு க்கு நோட்டு புத்தகங்கள், கல்வி உபகர ணங்கள் வழங்கும் விழா  7.6.2026 அன்று நடைபெற்றது நிகழ்ச்சியில் மாணவர் களுக்கு நோட்டு புத்தகங்களை சமூக ஊடகங்களில் கல்வி, வேலைவாய்ப்பு  விழிப்புணர்வு தகவல்களை அளித்து வரும் சமூக  சேவகர் தி. நந்தகுமார் வழங்கி பேசினார்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad