பலத்த மழையின் காரணமாக மழை நீர் செல் லும் கால்வாய்கள் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு !
குடியாத்தம் , செப்டம்பர் 16 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம்,
குடியாத்தம் நகரம், பழைய மருத்துவ மனை சாலை, அண்ணா தெரு, அம்பா புரம் பழைய பேருந்து நிலையம் மற்றும் சுண்ணாம்பேட்டை ஆகிய பகுதிகளில் ) இன்று முற்பகல் 11:30 மணியளவில் குடியாத்தம் வருவாய் கோட்ட அலுவலர் அவர்கள் மழைநீர் தேங்கும் இடங்களை ஆய்வு செய்து, மழைநீர் தேங்காமல் வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட துறை களுக்கு உத்தரவிட்டார். இவ்வாய்வின் போது குடியாத்தம் நகராட்சி ஆணையர் தனலட்சுமி குடியாத்தம் வருவாய் கோட் டாட்சியர் செந்தில்குமார் வட்டாட்சியர்
பிரியா வருவாய் ஆய்வாளர், செந்தில் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக