வாலாஜாவில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் !
ராணிப்பேட்டை , செப்டம்பர் -17 -
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட் டையில் இந்து மக்கள் கட்சி சார்பில்
வேலூர் கோட்டத்தலைவர் S.K.மோகன்
தலைமையில் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு மூன்றாவது நாளில்
விநாயகர் சிலைகள் அணிவகுத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இந்த விழாவில் நடராஜ நாட்டிய பள்ளி மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் மற்றும் ராமபஜனைகள் நடைபெற்றது. செளடாம்பிகா டெக்ஸ்டைல்ஸ் வெங்கடேசன் குடும்பத்தினர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங் கினர்.இந்த ஊர்வலம் வாலாஜா ஐயப்பன் கோயில் அருகில் தொடங்கி பஜார் வழியாக சென்று விசி மோட்டூர் ஏரியில்
விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் செய்து சிலைகளை நீரில் கரைக் கப்பட்டன. இந்நிகழ்வில் குருஜிஸ்ரீமுரளி
சுவாமிகள், மகா பிரத்தியங்கிரா ஸ்தாபகர் மணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். ஆன்மீக மாவட்ட பிரிவு தலைவர்கள் ஸ்ரீதர் செல்வராஜ் வரவேற்புரையாற்றினர்.சமூக ஊடகப்பிரிவு மாநில தலைவர் கண்ணன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் மற்றும் நகர செயலாளர், ஒன்றிய பொறுப்பாளர்கள், இளைஞர் அணிதலைவர், செயலாளர், கட்சிநிர்வாகிகள், பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் தலைமையிலான 500-க்கும் மேற்பட்ட போலீசார், மற்றும் வாலாஜா வட்டாட்சியர் நடராஜன், அதிவிரைவு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக