சிறப்பு பூங்கா பராமரிப்பு மற்றும் சிறந்த அரங்குகளுக்கு ரோஜா பூங்காவில் கேடயங்கள் பரிசளிப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 மே, 2022

சிறப்பு பூங்கா பராமரிப்பு மற்றும் சிறந்த அரங்குகளுக்கு ரோஜா பூங்காவில் கேடயங்கள் பரிசளிப்பு.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் 17வது ரோஜா கண்காட்சி நிறைவு விழாவில் நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவர் திரு மு. பொன்தோஸ் அவர்கள் சிறப்பு பூங்கா பராமரிப்புக்கு 22 கேடயங்களும், சிறந்த அரங்குகளுக்கு 44 கேடயங்களும், காட்சிப்படுத்தப்பட்ட அரங்குகள் மற்றும் சிறப்பு பரிசுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 43 கேடயங்களும் மொத்தம் 109 கேடயங்களை பரிசாக வழங்கினார். 


இவ்விழாவில் ஊட்டி நகராட்சி தலைவர் திருமதி. எம். வாணிஸ்ரீ அவர்களும், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் திரு. மாயன் ( எ) மாதன், தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் திரு பிரேம்குமார் அவர்களும், தோட்டக்கலை இணை இயக்குனர் ( பொ )  திருமதி ஷ பிலா மேரி, உதவி இயக்குனர் ( தோட்டக்கலை துறை ) திருமதி அனிதா மற்றும் அரசு துறை அலுவலர்கள்,  உள்ளாட்சி வார்டு உறுப்பினர்கள், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/