திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஓட்டலில் இவ்விழா நடைபெற்றது, விழாவிற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர். டி எஸ். ஆர். சுபாஷ் அவர்கள் தலைமை வகித்தார், மண்டலத் தலைவர் ரமேஷ், மாவட்டத் தலைவர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். அகில இந்திய பிரஸ் கவுன்சில் தேசிய குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட டாக்டர் சுப்பையா பாண்டியன், மயிலாடுதுறை எழில், நாகை சையது பக்ருதீன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இவருக்கான சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளை தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவரும், அகில இந்திய பொதுச்செயலாளருமான டி எஸ் ஆர் சுபாஷ் அவர்கள் வழங்கினார். இவ்விழாவில் 50 பெண்களுக்கு இலவச புடவையும், மதிய உணவும், சித்த மருந்து, மாத்திரைகள், கபசுரக் குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக ஜவகர் ஆறுமுகம் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் சமூக ஆர்வலர் முனைவர் ஜார்ஜ் ராஜ்குமார் ஜோசப், கண் மருத்துவமனை சுற்றுலா சிற்றாலயா ஆயர் டேவிட் பரமானந்தம், மருத்துவர்கள் விஜய் கார்த்திக், குமார், கணேசன் காளியம்மாள், சகுந்தலா, சந்தான கிருஷ்ணன், பிரபு பாண்டி, மனோஜ், ஜெனட், சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக