திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் மாணவர் அசத்தல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 21 மே, 2022

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் மாணவர் அசத்தல்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரி,இயந்திரவியல் துறை இறுதி ஆண்டு படித்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இரா.சுதர்சனன், தனது ஓய்வு நேரத்தில்,விடுமுறை நாட்களில், மற்றும் ஏதேனும் முக்கிய நாட்களில் சமூக சேவை மற்றும் பொது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்.


நாடு முழுவதும் COVID-19 கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது, இதையடுத்து  தனது சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்களுக்கு கொரோணா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உணவுகள் மற்றும் இலவச முகக் கவசங்கள் ஆகியவை வழங்கினார், மற்றும் பொதுமக்கள் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


சமூக ஆர்வலர்கள் மற்றும் சுதர்சனன் இவருக்கு உறுதுணையாக இருக்கும் கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரி - முதல்வர் முனைவர்.செந்தில்குமார், இயந்திரவியல் துறை தலைவர்(MECHANICAL DEPARTMENT-HOD) - முனைவர். பாலன், வகுப்பு ஆலோசகர்கள்(CLASS ADVISORS) - வெங்கடேஷ், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்(NSS CO-ORDINATOR) கந்தசாமி மற்றும் பல ஆசிரியர்கள், சக நண்பர்கள் உறுதுணையோடு பல சமூக பணிகளை செய்து வருகிறார், இவரது பணிகளை கண்டு ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/