200க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 29 செப்டம்பர், 2022

200க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா.

தமிழக அரசு சார்பாக இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா கள்ளக்குறிச்சி மாவட்டம் அவைத்தலைவர் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் அவர்கள் கலந்து கொண்டு சமுதாய வளைகாப்பு விழா நடத்தி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் திருநாவலர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சாந்தி இளங்கோவன் துணைத் தலைவர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய கவுன்சிலர்கள் திருநாள் வட்டார மருத்துவர் அனிதா வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகணேஷ் திருநாவலூர் காவல் ஆய்வாளர் அசோகன் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டார்கள் .


- கள்ளக்குறிச்சி செய்தியாளர் பார்த்திபன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/