திருப்பதி பெருமாளுக்கு திருப்பூர் பக்தரின் காணிக்கை திருப்பதி கோவில் பிரம்மோற்சவத்திற்காக 5 லட்சம் ரூபாய் செலவில் பாதாம், முந்திரியால் கிரீடம் மற்றும் மாலை தயாரிக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி தினமும் ஏழுமலையானுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று வருகிறது.
இந்த திருமஞ்சனத்தில் மலையப்ப சுவாமியை அலங்காரிப்பதற்காக பாதாம், முந்திரி, ஏலக்காய், மற்றும் உலர்ந்த பழங்கள், அரிய வகை மலர்கள் ஆகியவற்றை கொண்டு கிரீடம் மற்றும் மாலை தயாரிக்கப்பட்டு உள்ளது.
5 லட்சம் ரூபாய் செலவில் பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட கிரீடம், மாலையை திருப்பூரைச் சேர்ந்த பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளிடம் நன்கொடையாக வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக