மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு. 30.09.2022 மற்றும் 01.10.2022 ஆகிய நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு. பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்ற தடப்பேருந்துகள். கீழ்கண்ட அட்டவணைபடி இயக்கப்படும். மேலும், இதர பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
பேருந்து நிலையம் மற்றும் இயக்கப்படும் பேருந்துகளின் விவரம் பின்வருமாறு :
தாம்பரம் மெப்ஸ் (MEPZ) பேருந்து நிலையம்.
இயக்கப்படும் பேருந்துகள்: திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள். போளூர். சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர். சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர். சிதம்பரம் செல்லும் பேருந்துகள்,
பூவிருந்தவல்லி பைபாஸ் பேருந்து நிலையம்.
(மா.போ.க. பூவிருந்தவல்லி பணிமனை அருகில் ) இயக்கப்படும் பேருந்துகள் வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறுபு ஓசூர். திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள்
கோயம்பேடு பேருந்து நிலையம்.
இயக்கப்படும் பேருந்துகள்: மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வழி ECR). மயிலாடுதுறை. தஞ்சாவூர், கும்பகோணம். திருவாரூர். திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெங்கொண்டம். திருச்சி. மதுரை, திருநெல்வேலி செங்கோட்டை தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி. புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் பெங்களூர், திருவனந்தபுரம் மற்றும் குருவாயூர்).

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக