திருவிதாங்கோடில் 9-ம் வகுப்பு முதல் கல்லூரி வரையிலான படிக்கும் மாணவர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் 125 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவிதாங்கோடு கிளை தலைவர் முஸம்மில் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் குமரி மாவட்ட தலைவர் நபில் அஹ்மத், செயலாளர் ஹுசைன் ஜவாஹிரி, பொருளாளர் செய்யது அகமது கரீம், துணைத் தலைவர் முகம்மது யாசிர், துணைச் செயலாளர்கள் நூருல் அமீன், முகம்மது கியாசுதீன், முகம்மது ராபி திருவிதாங்கோடு சபீக், பொருளாளர் அப்துல் ஹமீது, துணைத் தலைவர் முகம்மது இக்பால் துணை செயலாளர் ஜாகிர் உசேன், பேச்சாளர்கள் சபீக், கமால், முகம்மது ஆசிக், என பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி வகுப்பில் அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி தாய் தந்தையை பேனுதல் என்ற தலைப்பிலும் திருநெல்வேலி மாவட்ட தலைவர் மசூத் உஸ்மானி இலக்கை நோக்கி வா இளைஞனே என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக