மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் இருந்து வைத்தீஸ்வரன் கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் பின்னால் பள்ளி மாணவர்கள் தொங்கியபடி செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பள்ளி மாணவர்கள் பஸ்சின் பின்னால் தொங்கியபடியும், மேல்புறத்தில் அமர்ந்த படியும் செல்லும் காட்சிகளை பின்னால் சென்ற வாகன ஓட்டி ஒருவர் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
பஸ்சில் இடம் கிடைக்காததால் இது போன்ற ஆபத்தான பயணம் மாணவர்கள் மேற்கொள்வதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், மாவட்ட நிர்வாகம் மாணவர்கள் நலன் கருதி கூடுதல் பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக