பாப்புலர் ஃப்ரண்ட் தமிழ்நாடு மாநில தலைமையகத்திலும், மாநில நிர்வாகிகளின் வீட்டிலும் NIA தற்பொழுது சோதனையில் ஈடுபட்டு வருகிறது - முஹம்மது சேக் அன்சாரி மாநில தலைவர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 22 செப்டம்பர், 2022

பாப்புலர் ஃப்ரண்ட் தமிழ்நாடு மாநில தலைமையகத்திலும், மாநில நிர்வாகிகளின் வீட்டிலும் NIA தற்பொழுது சோதனையில் ஈடுபட்டு வருகிறது - முஹம்மது சேக் அன்சாரி மாநில தலைவர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழ்நாடு மாநில தலைவர்  முஹம்மது சேக் அன்சாரி தனது கண்டன அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகம், மாநில துணைத் தலைவர் வீடு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) சோதனை மேற்கொண்டு வருகின்றது. இது பாஜக அரசின் அரசியல் உள்நோக்கம் கொண்ட கொழைத் தனமான செயல்பாடு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மக்கள் விரோத செயல்பாடுகளை அம்பலப்படுத்தும் அனைவர்களையும் அச்சுறுத்த என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை பயன்படுத்தி அச்சுறுத்த நினைக்கின்றது. 


மக்கள் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட்-ஐ அச்சுறுத்தவோ, முடக்கவோ முடியாது. மக்கள் விரோத, நாசகார செயல்களில் ஈடுபட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சுதந்திரமாக செயல்படுகின்றது. அந்த அமைப்பின் உறுப்பினர் இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு குண்டு வெடிப்பு நிகழ்ச்சிகளுக்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ் உடைய கை இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அவர்களைப் பற்றி எந்த விசாரணை அமைப்புகளும் விசாரிப்பதற்கு தயாராக இல்லாத நிலையில் மக்கள் சேவையை தங்களுடைய லட்சியமாக கொண்டு செயல்படும் பாப்புலர் ஃப்ரண்ட் மீது வஞ்சகத்தோடு செயல்படும் பாஜக அரசின் எந்த நிகழ்வும் அராஜகமானது. 


இத்தகைய ஜனநாயக விரோத பாஜக அரசின் செயல்பாட்டிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad