பொள்ளாச்சியை அடுத்த பொங்காளியூர் என்ற பகுதியில் குடிநீர் வினியோகம் சீராக இல்லாததை கண்டித்து அந்தப் பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் பேரூராட்சி அதிகாரிகள் விரைந்து குடிநீர் வினியோகம் சரி செய்யப்படும் என்று உறுதி அளித்து அதற்கான பணிகளையும் தொடங்கினர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக