மேல்விஷாரம் நேஷனல் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் ஓபன் பேட்மிட்டன் போட்டி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 பிப்ரவரி, 2023

மேல்விஷாரம் நேஷனல் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் ஓபன் பேட்மிட்டன் போட்டி.


மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மேல்விஷாரம் ஆண்களுக்கான ஓபன் பேட்மிண்டன் போட்டி குளோபல் பேட்மிண்டன் அகாடமியில் நடைபெற்றது. 

இந்த போட்டிக்கு அசோசியேஷன் தலைவர் கே.முஹம்மத் அயூப் தலைமை தாங்கினார். இந்த போட்டியினை  சி.அப்துல் ஹக்கீம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் எஸ்.இசட்.அப்ரார் அஹ்மத் சாஹிப் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்கள்.


மேலும் சிறிது நேரம் பேட்மிண்டன் விளையாடி மகிழ்ந்தார். சிறப்பு விருந்தினராக. ராணிப்பேட்டை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்  பிரபு  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாணவர்கள் விளையாட்டோடு படிப்பிலும் முக்கியத்துவம் தர வேண்டும் முயற்சி செய்தால் அனைத்தும் சாதிக்க முடியும் என்று பேசினார்கள். 


பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். அப்போது அசோசியேஷன் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், பேட்மிண்டன் வீரர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


- வாலாஜா செய்தியாளர் நிஹால் அஹமத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/