தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கிள்ளிகுளத்தில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக கிராமப்புற வேளாண் பணி அனுபவம் மற்றும் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். கல்லூரி முதல்வர் தேரடிமணி தலைமையில், பேராசிரியர்கள் தாமோதரன் மற்றும் செந்தில்நாதன், இணை பேராசிரியர்கள் சபரிநாதன், சுப்புலட்சுமி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி வேளாண்மை உதவி இயக்குநர் இளஞ்செழியன், வேளாண்மை அலுவலர் கவுசல்யா, துணை வேளாண்மை அலுவலர் காசி ஆகியோரின் ஆலோசனைப்படி வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் திருமலாபுரம் கிராமத்தில் பாரம்பரிய நெல் இரகங்கள் மற்றும் பூச்சி இன் கவர்ச்சி பொறிகள் என்னும் தலைப்பில் கண்காட்சி அமைத்து விவசாயிகளுக்கு அவற்றின் முக்கியத்துவத்தை விளக்கினர்.
Post Top Ad
செவ்வாய், 14 பிப்ரவரி, 2023
பாரம்பரிய நெல் இரகங்கள் மற்றும் பூச்சி இன் கவர்ச்சி பொறிகள் கண்காட்சி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக