தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கம் இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்புடன் இணைந்து 14 வயதுக்குட்பட்டற்கான மாநில அளவிலான 13வது ஆண்டு கிரிக்கெட் போட்டி ராணிப்பேட்டை பெல் ஊரக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்து கலந்து கொண்டனர். சென்னை நீலகிரி ராணிப்பேட்டை கன்னியாகுமரி செங்கல்பட்டு திருப்பத்தூர் பெரம்பலூர் மற்றும் வேலூர் அணிகள் டி20 லீக் கம் நாக்கவுட் அடிப்படையில் விளையாட்டுகளை விளையாடினர்.
இதில் ராணிப்பேட்டை வேலூர் மாவட்டங்களில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர் இதை அடுத்து இறுதி போட்டியில் ராணிப்பேட்டை மாவட்ட அணி வெற்றி பெற்று பதிமூன்றாவது ஆண்டு மாநில அளவிலான சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
வெற்றி பெற்று அணிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்க நிறுவனரும் பொதுச் செயலாளருமான பி. பி. சுனில் குமார் தலைமை வகித்தார். இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பு தமிழ்நாடு தலைவரும் காவல்துறை முன்னாள் DGP கே .கே சொக்கலிங்கம், IPS வாழ்த்தி பேசினார். விழாவில் ராணிப்பேட்டை பெல் நிறுவன செயல் இயக்குனர் ராஜு சிங் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை வழங்கி பாராட்டு தெரிவித்துதார் இதில் ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகள் கிரிக்கெட் சங்க தலைவர் கே. கிருஷ்ண கிஷோர் ஜெனரல் செயலாளர் ஜெ .செந்தில்குமார் பொருளாளர் கே .சீனு மற்றும் செயற்குழு உறுப்பினர் எஸ். ஸ்ரீதர் பா. மகேஷ் PG. வெற்றிவேல் J. திருமால் பயிற்சியாளர் டி. நவீன் குமார் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- லாஜா செய்தியாளர் நிஹால் அஹமத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக