புதுவை மாநில உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி மின்துறை அதிகாரியை நேரில் சந்தித்து மனு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 26 ஜூலை, 2023

புதுவை மாநில உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி மின்துறை அதிகாரியை நேரில் சந்தித்து மனு.


புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட தமிழ்த்தாய் நகர் பகுதியில் உள்ள புறா குளம், லால் பகதூர் சாஸ்திரி வீதி, மகாத்மா காந்தி வீதி மத்தியில் உள்ள ஐ-மாஸ் விளக்கு, காந்தி வீதியில் உள்ள தெருவிளக்கு, நேதாஜி நகர் 2 ரங்கநாதன் வீதி அழகர்சாமி வீதி சந்திப்பில் உள்ள தெருவிளக்கு ஆகிய விளக்குகளை சரி செய்தும், புதிதாக கூடுதல் தெருவிளக்குகள் அமைத்துக் கொடுக்கும்படி  உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி  மின்துறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். 

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மின்விளக்குகள் எரியாத பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து பின்னர் பொதுமக்களுடன் சென்று இம்மனுவினை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மின்துறை அதிகாரிகளிடம் அளித்தார். தமிழ்த்தாய்  நகர் புறா குளத்தில் கூடுதலாக ஐ மாஸ் விளக்குகள்  பொருத்திக் கொடுக்கும்படி உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கேட்டுக் கொண்டுள்ளார். அதிகாரிகள் இதனை உடனே செய்து தருவதாக உறுதி அளித்தனர். தற்சமயம் சின்ன மணிக் கூண்டு பகுதியில் உள்ள ஐமாஸ் விளக்கு சரி செய்யப்பட்டது, நேத்தஜி  நகர் இரண்டில் கூடுதல் விளக்கு பொருத்தப்பட்டது, தமிழ்த்தாய் நகரில் கூடுதல் விளக்கு பொருத்தப்பட்டது.


மகாத்மா காந்தி சாலையில் உள்ள பழைய விலங்குகளை அகற்றி புதிய விளக்குகள் பொருத்தப்பட்டது இதனை  சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி உடன் இருந்து பணிகளை செய்து முடித்தார். உடன் அவைத் தலைவர் ஹரிகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில பிரதிநிதி மணிகண்டன், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளைச் செயலாளர்கள் காளப்பன், ராகேஷ் கௌதமன், ஆட்டோ ஓட்டுநர்கள், சின்னக்கடை சாலையோர வியாபாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/