மேலும் நகராட்சி அதிகாரிகளை வரவழைத்து அவர்களுடனும் இணைந்து அப்பணிகளை நேரில் சென்று சட்டமன்ற உறுப்பினர் ஆய்வுகள் மேற்கொண்டார். ஆய்வின் பொழுது சில மரங்கள் சாய்ந்து கொண்டு பொதுமக்களுக்கு தொந்தரவாக உள்ளதாக அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர் அதனை அதிகாரிகளிடம் நேரில் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் காண்பித்து சாய்ந்த மரத்தையும், வேர்களை அகற்றி கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை சாய்ந்த மரங்களை அகற்றி கொடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர் மேலும் பணிகளில் எந்த தடங்கலும் இல்லாமல் தொடர்ச்சியாக வேகமாக நடக்கும் என்று அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர் உறுதி அளித்தனர். உடன் அவைத் தலைவர் அரிகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் தொகுதி செயலாளர் ராஜி, மாநில மீனவரணி விநாயகமூர்த்தி, மாநில மாணவரணி நிசார், கிளை செயலாளர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக