வாய்க்கால் தூர்வாரி சுத்தம் செய்யும் பணிக்கான பூமி பூஜையை திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி தொடங்கி வைத்தார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 30 ஜூலை, 2023

வாய்க்கால் தூர்வாரி சுத்தம் செய்யும் பணிக்கான பூமி பூஜையை திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி தொடங்கி வைத்தார்.


மழைக்காலம் நெருங்கிய நிலையில் புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாய்க்கால்களையும் தூர்வார  உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி  பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்து வந்தார், தொகுதிக்குட்பட்ட ப-வடிவ வாய்க்கால்களை இதுவரை மூன்று முறை க்கு மேல் சட்டமன்ற உறுப்பினர் துரித நடவடிக்கையால் பொதுப்பணித்துறை மூலம் தூர் வார செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதன் தொடர்ச்சியாக நேற்று தொகுதிக்கு உட்பட்ட ஒத்தவாடை வீதி, பாரதி மில் வீதி, டாக்டர் அம்பேத்கர் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள ப-வடிவ வாய்க்கால் தூர்வாரி சுத்தம் செய்யும் பணிக்கான பூமி பூஜை போடப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி  பணியினை தொடங்கி வைத்தார், உடன் உதவி பொறியாளர் பார்த்தசாரதி, அக்கட்சியின் அவைத்தலைவர் ஹரிகிருஷ்ணன், ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு, கிளைச் செயலாளர் ராகேஷ், ரவி, மார்க் ஆகியோர் உடன் இருந்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/