திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா தேரோட்டம் நடந்தது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா தேரோட்டம் நடந்தது.

திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் 191-வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெற்ற திருவிழா நாட்களில் தினமும் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், சர்ப்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.


விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 11-ம் திருநாளில் நடந்தது. இதையொட்டி காலையில் உகப்படிப்பு, பணிவிடை நடந்தது. மதியம் உச்சிப்படிப்பு, பணிவிடை நடைபெற்றது. மதியம் 1.15 மணியளவில் அய்யா வைகுண்டர் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திரளான பக்தர்களுடன் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.


அவதார பதியைச் சுற்றி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் அய்யா வைகுண்டருக்கு சுருள் வைத்து வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்ன தர்மம் வழங்கப்பட்டது. இரவில் அய்யா வைகுண்டர் காளை வாகனத்தில் எழுந்தருளி, அவதாரப தியைச் சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அய்யாவழி அகில திருக் குடும்ப மக்கள் சபை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/