இராணிப்பேட்டையில் தி.மு.க.வின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணிகளின் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும், ஆளுநரையும் கண்டித்து முத்துக்கடை பஸ் நிலையம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத் வரவேற்று பேசினார். உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் மத்திய மந்திரி, அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.எஸ். ஜெகத்ரட்சகன் தொடங்கி வைத்து பேசினார்.
தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஆலோசகர் லெனின் கண்டன உரையாற்றுகிறார் உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, சிவானந்தம், துரைமஸ்தான், ஏ.வி.சாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுந்தரம், அசோகன், கண்ணையன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், ராணிப்பேட்டை, வாலாஜா நகர மன்ற தலைவர்கள் சுஜாதா, ஹரிணி, அம்மூர் பேரூராட்சிமன்ற தலைவர் சங்கீதா மகேஷ், நகர செயலாளர்கள் பூங்காவனம், தில்லை உள்பட ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி நிர்வாகிகள் உள்பட சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மருத்துவ அணி அமைப்பாளர் சரவணன் நன்றி கூறுகிறார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக