காட்பாடி அருகே இருசக்கர வாகன விபத் தில் மூளை சாவு அடைந்த இளைஞர் உடல் உறுப்புகள் தானம் !
காட்பாடி , ஜுன் 22 -
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள சேர்காடு கிராமத்தைச் சேர்ந்த (24வயது) ஞான சேகர் சுப்ரமணி என்ற வெல்டர், ஜூன் 20 ஆம் தேதி இரவு 9:30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண் டிருந்த போது சாலை விபத்தில் சிக்கி னார் . அப்போது அவர் சறுக்கி கீழே விழுந்தார். ஜூன் 21 ஆம் தேதி எமது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அதே நாளில் மூளைச்சாவு அடைந் ததாக அறிவிக்கப்பட்டார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர். இதயம் மற்றும் நுரையீரல்கள் சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனை யும் , கல்லீரல் வேலூர் சி.எம்.சி மருத்து வமனையும் எடுத்துக்கொள்ளப்படும். ஒரு சிறுநீரகம் வேலூர் சி.எம்.சி மருத்து வமனையும், மற்றொரு சிறுநீரகம் சென்னை டாக்டர் காமாக்ஷி நினைவு மருத்துவமனையாலும் எடுத்துக் கொள் ளப்படும். அவரது தந்தை சுப்ரமணி ஒரு வெல்டர் ஆவார், அவரது தாயார் லட்சுமி ஒரு ஷூ கம்பெனியில் பணிபுரிகிறார். அவருக்கு ரம்யா என்ற 23 வயதான தங்கை திருமணமாகி பெங்களூரில் குடியேறியுள்ளார். என தெரிவித்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக