சென்னை | பிப்ரவரி 06:
சென்னை, கிழக்கு தாம்பரத்தில் அமைந்துள்ள Madras Christian College (மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரி) இதழியல் துறை சார்பில், பாலியல் தொல்லைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘அரண்–26 (ARAN ’26)’ என்ற மூன்று நாள் பொதுத் தொடர்பு இயக்கம் நடத்தப்படுகிறது.
இந்த இயக்கத்தின் மூலம், பாலியல் தொல்லை என்றால் என்ன, அது உடல் ரீதியாகவும், இணையவழியாகவும் எவ்வாறு நடைபெறுகிறது, அதை எவ்வாறு அடையாளம் காணலாம், தடுக்கலாம் என்பதுடன், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக எடுக்க வேண்டிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு எளிய முறையில் விளக்கப்படுகிறது.
இயக்கத்தின் முக்கிய நோக்கங்கள்
-
பாலியல் தொல்லை குறித்த தெளிவான சமூகப் புரிதலை உருவாக்குதல்
-
பாதுகாப்பான மற்றும் மரியாதைமிக்க சமூக சூழலை உருவாக்குதல்
-
சிறுவயதிலிருந்தே விழிப்புணர்வு கல்வி வழங்குதல்
-
POSH Act, POCSO Act, காவல் உதவி, பிங்க் பேட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் புகார் அளிக்கும் நடைமுறைகள் குறித்து அறிவூட்டுதல்
பாலியல் தொல்லை குறித்த தெளிவான சமூகப் புரிதலை உருவாக்குதல்
பாதுகாப்பான மற்றும் மரியாதைமிக்க சமூக சூழலை உருவாக்குதல்
சிறுவயதிலிருந்தே விழிப்புணர்வு கல்வி வழங்குதல்
POSH Act, POCSO Act, காவல் உதவி, பிங்க் பேட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் புகார் அளிக்கும் நடைமுறைகள் குறித்து அறிவூட்டுதல்
நிகழ்ச்சி விவரம்:
-
பாலியல் தொல்லை குறித்த தவறான நம்பிக்கைகளை நீக்கும் அமர்வு
-
இணையவழி பாலியல் தொல்லை பற்றிய விழிப்புணர்வு
-
பணியிடங்களில் POSH சட்டம் குறித்த விளக்கம்
.jpg)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக