தூத்துக்குடி தாளமுத்துநகர் ஜோதி பாஸ் நகரைச் சேர்ந்த பெருமாள் மகன் கண்ணன் (44) என்பவர் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 25.08.2023 அன்று கண்ணன் தூத்துக்குடி வெற்றிவேல்புரம் அருகே உள்ள ஒரு தியேட்டர் அருகே தனது வேனை ஓட்டி வந்தபோது அங்கு வந்த தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்தவர்களான அமல்ராஜ் மகன் விமல்ராஜ் (19), அந்தோணி மகன் சதீஷ் (19) மற்றும் ஒருவர் சேர்ந்து கண்ணன் ஓட்டி வந்த வேனை வழிமறித்து வேனை சேதப்படுத்தி அவரை கத்தியால் தாக்கி அவரிடம் இருந்த 2 செல்போன்களையும் பறித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் வழக்கு பதிவு செய்து விமல்ராஜ் மற்றும் சதீஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 11,000/- மதிப்புள்ள 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தார்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி விமல்ராஜ் என்பவர் மீது ஏற்கனவே தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும், சதீஷ் மீது ஒரு திருட்டு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக