தூத்துக்குடி - சிப்காட் பகுதியில் தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 எதிரிகள் கைது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி - சிப்காட் பகுதியில் தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 எதிரிகள் கைது.

தூத்துக்குடி, சிப்காட் பகுதியில் தபால் தந்தி காலனி பகுதியைச் சேர்ந்த கோவில் மணி (63) என்பவரது மகன் சாமுவேல் விக்டர் (34) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த மந்திரகுமார் (53) என்பவரின் மகளை கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்.


இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஏழு வருடங்களாக தனியாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதன் காரணமாக சாமுவேல் குடும்பத்தினருக்கும் மந்திரகுமார் குடும்பத்தினருக்கும் இடையே விரோதம் இருந்து வந்துள்ளது.


இந்நிலையில் மந்திரகுமார் அவரது உறவினர்களான தபால் தந்தி காலனியைச் சேர்ந்த காசி மகன் கற்குவேல் (52) மற்றும் தூத்துக்குடி அந்தோனியார்புரம் பகுதியைச் சேர்ந்த சேவியர் மகன் ரிச்சர்ட் (38) ஆகியோருடன் சேர்ந்து கடந்த 18.08.2023 அன்று சாமுவேல் விக்டர் வீட்டிற்கு சென்று அங்கு இருந்த சாமுவேல் விக்டர் மற்றும் அவரது தந்தை கோவில்மணி ஆகியோரிடம் தகராறு செய்து தவறாக பேசி இரும்பு கம்பி மற்றும் அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.


இதுகுறித்து சாமுவேல் விக்டர் நேற்று அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் வழக்கு பதிவு செய்து மேற்படி நபர்களான மந்திரகுமார், கற்குவேல் மற்றும் ரிச்சர்ட் ஆகிய 3 பேரையும் கைது செய்தார். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/