மதுரை திடீர் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோயிலில், 68 ஆம் ஆண்டு உற்சாக விழாவை முன்னிட்டு, பால்குடம் எடுத்து அழகு குத்தி நேர்த்திக்கடனை பொதுமக்கள் செலுத்தினர். இக் கோயிலில் ஆடித் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, அருள்மிகு சந்தன மாரியம்மனுக்கு, கோயில் விழாக் குழுவின் சார்பில், பால், இளநீர், சந்தனம் போன்ற அபிஷேக திரவியங்களால், சிறப்பு அபிஷேகமும், அதைத். தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மதுரை மேலமடை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், ஆடி வெள்ளிக்கிழமையை, முன்னிட்டு, இக் கோயிலில் அமைந்துள்ள வராஹியம்மன், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகள் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக