மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் அலுவலகத்தில் 77-வது சுதந்திர தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நேஷனல் வெல்ஃபேர் அசோசியேசன் அலுவலகத்தில் 77வது தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு அசோசியேஷன் தலைவர் கே.முஹம்மத் அயூப் தலைமை தாங்கினார்.
அசோசியேஷன் நிர்வாகிகள் அ.முஹம்மத் தமீம், எச்.முஹம்மத் ஹாஷிம், யி.முஹம்மத் ஹலீம், வி.அன்சர் அஹ்மத் மற்றும் யி.முஹம்மத் உஸ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அசோசியேஷன் துணைத் தலைவர் கே.முஹம்மத் இத்ரீஸ் வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக டாக்டர் சி. அன்பு சுரேஷ் ராவ் தலைமை ஆலோசகர் மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் (CMC வேலூர்) அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்கள்.
அதனை தொடர்ந்து ஜனாப் எஸ்.இசட். அப்ரார் அஹ்மத் செயலாளர் மற்றும் சி.அப்துல் ஹக்கீம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் அவர்கள் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கினார்கள். டாக்டர்.அன்பு சுரேஷ் ராவ் அவர்கள் ஊக்கமளிக்கும் பேச்சாளர் மற்றும் மேல்விஷாரம் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக அயராது உழைக்கும் திரு.எம்.சுஹைல் அஹ்மத் அவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. அசோசியேஷன் பொருளாளர் ஜி.முஹம்மத் பஹிம் அவர்கள் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
அசோசியேஷன் துணை செயலாளர் கே.ஓ.நிஷாத் அஹ்மத் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
வாலாஜா தாலுகா செய்தியாளர் நிகால் அஹமத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக