வேலூர் மாவட்டத்தில் தியாகி குமரன் தொண்டு அறக்கட்டளை மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் கண் சிகிச்சை முகாம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

வேலூர் மாவட்டத்தில் தியாகி குமரன் தொண்டு அறக்கட்டளை மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் கண் சிகிச்சை முகாம்.

தியாகி குமரன் தொண்டு அறக்கட்டளை மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் கண் சிகிச்சை முகாம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் 
தியாகி குமரன் தொண்டு அறக்கட்டளை மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சென்னை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம் தியாகி குமரன் தொண்டு அறக்கட்டளையின்  மாநில பொருளாளர் பேராசிரியர் வே.வினாயகமூர்த்தி  அவர்களின் தலைமையயில்  நடைபெற்றது. 
மாநில அமைப்புச் செயலாளர் க. சையத் அலீம்   அனைவரையும் வரவேற்றார். குடியேற்றம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராசன் அவர்கள்  வாழ்த்துரை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.


லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்
பள்ளியில் தாளாளர்


 வி. சடகோபன், தியாகி குமரன் தொண்டு அறக்கட்டளையின் மாநில தலைவர்  பொ.கார்த்திகேயன் ,  
லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் செயலாளர்  ரம்யா கண்ணன், தியாகி குமரன் தொண்டு அறக்கட்டளையின் மாநில செயலாளர் எஸ். சுரேஷ் ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். 

இந்த முகாமில் 100க்கும் மேற்பட்டவர்கள் கண் சம்மந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு சிகிச்சைப்பெற்று பலன் அடைந்தனர்.


வேலூர் மாவட்ட தலைவர் ப.ஜீவானந்தம்  மாநிலத் துணைச் செயலாளர்  கே.கே. உலகநாதன்  மாநில சட்ட  ஆலோசகர் சரவணகுமார் நகர நிர்வாகிகள் முருகன் ஞானகுமார்  உள்ளிட்டோர் 
கலந்து கொண்டனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/