ராணிப்பேட்டை மாவட்டம், காரை போதிதம்மா புத்த விஹாரில் முழுநிலவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது, புத்தர் விஹார் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
இந்தநிகழ்வின் போது திரி தரிசனம் பஞ்சசீலம் கூறி வழிபாடு செய்தனர், D. முத்து, K.வேலாயுதம் மற்றும் S.மலையராஜன் ஆகியோர் கலந்துக் கொண்டனர், அதனைத் தொடர்ந்து A.சிவானந்தன் தலைமையில் புதிய டவுன்ஷிப் குவார்ட்டர்ஸ்யில் முழுநிலவு ( பௌர்ணமி) நிகழ்ச்சி நடைபெற்து இந்நிகழ்வு போது தனிகாச்சலம் பண்பாட்டு பரப்புரை செய்தார்.
அதன்பின்பாக சிவானந்தன் புத்தரின் தம்மம் (ஒழுக்கம்) என்பது யாது என்பதை விளக்கினார் புத்தரும் அவர் தம்மமும் புத்தகத்தில்இடம் பெற்று இருந்த கருத்துக்களை எடுத்து கூறினார்.
அதனைத் தொடர்ந்து புஷேத்தமன், D. ரவி K.வேலாயுதம் பௌத்த கருத்துக்களை தெரிவித்தனர். S.ராஜாராம், பெல் SC&ST. யூனியன் முன்னாள் தலைவர். ஜி. பாலாஜி பெல் SC&ST. யூனியன் முன்னாள் பொறுப்பாளர். விமல்குமார் சிவராஜ் ,வீரபாண்டியன் மற்றும் சிறுபிள்ளைகள், பெல் நிறுவனத்தில் பணிபுரியும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சியின் இறுதியில் சிறுபிள்ளைகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக