ஆழ்வார்திருநகரி - ஆளவந்தார் திருவதார திருவிழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

ஆழ்வார்திருநகரி - ஆளவந்தார் திருவதார திருவிழா.

தூத்துக்குடி, தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஆழ்வார்திருநகரி எம்பெருமானார்(ராமானுஜர்) ஆச்சாரியன் ஆளவந்தார் ஆவார். ஆளவந்தார் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் அவதரித்தார். ஆழ்வார்திருநகரி ராமானுஜர் சந்ததியில் கடந்த 7 நாட்கள் தினசரி நாலாயிர திவ்யப் பிரபந்தம் சாத்து முறை நடந்தது. 


நேற்று (31.07.2023) அவதார தினமான ஆடி உத்திராடம் நட்சத்திரத்தில் காலை 7 மணிக்கு விஸ்வரூபம் 8 மணிக்கு திருமஞ்சனம். 9 மணிக்கு தீபாராதனை 10 மணிக்கு எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் துவங்க நாலாயிர திவ்யப்பிரபந்தம் சாத்துமுறை ஆழ்வார் பிரசாதம் பின்னர் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் திருவாய்மொழி பிள்ளை ஸ்வாமி. கற்கும் திருமாளிகை ஸ்வாமிகள் மதுரகவி அண்ணாவியார் பாலாஜி முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி ஆரியாஸ், விக்ரம், ராம்பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/