நாசரேத் இரயில்வே கேட்டில் இரயிலில் அடிபட்ட காது கேட்காத முதியவர் பலி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

நாசரேத் இரயில்வே கேட்டில் இரயிலில் அடிபட்ட காது கேட்காத முதியவர் பலி.

நாசரேத் இரயில்வே கேட்டில் காது கேட்காத முதியவர் இரயிலில் அடிபட்டு பலியானார். நாசரேத் அருகில் உள்ள மூக்குப்பீறியைச் சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 55). இவருக்கு திருமணமாகி விட்டது. ஆனால் மனைவி இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் தென்னை, பனை மரங்கள் ஏறும் தொழில் செய்து வந்தார்.


இவருக்கு காது கேட்காது. இந்நிலையில் சம்பவதன்று காலை 8.45 மணியளவில் நாசரேத் பஜாருக்கு வந்து கொண்டிருந்த போது திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் இரயில் நாசரேத் இரயில் நிலையத்திற்குள் நுழையவும் இரயில் வரும் சத்தம் கேட்காததால் இரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டபோது இரயிலில் அடிபட்டு அந்த இடத்திலே பலியானார். இது குறித்து இரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/