பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு..
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேபிரசித்தி பெற்ற பெரிய நாயகி அம்மன் உடனுறை
கைலாசநாதர் மலைக்கோயில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. நந்திகேஷ்வரருக்கும் கைலாசநாதர்க்கும் ஒன்பது வகையான அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்து தீபாரதனைகளும் நடைபெற்றது.
உலக அமைதிக்காக கூட்டு வழிபாடும் நடைபெற்றது. தேனிமாவட்டத்தில் இருந்து அதிக பக்தர்கள் வந்து தரிசனம் செய்தார்கள் பிரதோஷ கட்டளைதாரர்கள் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை அன்பர் பணிசெய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் செயலாளர் க.சிவகுமார் மற்றும் குழு உறுப்பினர்கள் கோயில் நிர்வாகத்தின் சார்பாக செய்து இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக