திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கீழநத்தம் கிராமம் வடக்கூர் பஞ்சாயத்து 2 வது வார்டு உறுப்பினர் ராஜா மணி (30) என்பவருக்கு இன்று (13.08.2023) மர்ம நபர்களால் அரிவாள் வெட்டு விழுந்தது, உடனே அவரை மீட்டு நிலையில் பாளை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அளிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் ராஜாமணி உயிரிழந்து விட்டார். எனவே பாளையங்கோட்டை தாலுகா காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் இக்கொலை சம்பவத்தை கண்டித்து அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக