விசிக ராணிப்பேட்டை மைய மாவட்ட செயற்குழு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
இராணிப்பேட்டை மைய மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் சீ. ம.ரமேஷ்கர்ணா, தலைமையில் நடைபெற்றது
இச்செயற்குழு கூட்டத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் பதினோராம் வகுப்பு படிக்கும் சின்னதுரை என்ற மாணவனையும் 13 வயது அவருடைய தங்கையையும் வலை வரி தாக்குதல் நடத்திய சாதி வெறிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இக்கொடூர செயலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
அதனைத் தொடர்ந்து வருகிற 17-08-2023 அன்று எழுச்சித்தமிழர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டன மேட்டுத்தெங்கால் பகுதியில் எழுச்சித்தமிழரின் பிறந்த நாளை முன்னிட்டு கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடத்துவதென கருத்து தெரிவிக்கப்பட்டது இந்த செயற்குழு கூட்டத்தில் மாநில மாவட்ட மண்டல ஒன்றிய நகர கிளைக் கழகச் செயலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக