ஆதரவற்ற சடலங்களை தாமாக முன்வந்து அடக்கம் செய்து வரும் சமூக ஆர்வலர் கோபிநாத்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அரியூர் பகுதியில் உள்ள ஸ்ரீபுரம் பேருந்து நிலையத்தில் சில தினங்களுக்கு முன்பு இறந்த நிலையில் கேட்பாரற்று கிடந்த முதியவரின் சடலத்தை சமூக சேவகர் எம்.கோபிநாத் முன்னின்று அடக்கம் செய்தார். அரியூர் பகுதியில் உள்ள ஸ்ரீபுரம் பேருந்து நிறுத்தத்தில் அடையாளம் தெரியாத சுமார்( 60 வயது ) மதிக்கத்தக்க முதியவர் இறந்துகிடந்தார். இரண்டு வாரத்துக்கு மேலாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் சவ கிடங்கில் வைக்கப்பட்டது. விளம்பரம் கொடுக்கப்பட்டும் யாரும் தேடி வரவில்லை.
இதையடுத்து, அரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சின்னப்பன் மற்றும் ஜனார்த்தனம் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இருந்த
முதியவரின் உடலை சமூக சேவகர் எம்.கோபிநாத் பெற்றார்.
வேலூர் மாநகராட்சியின் வழிகாட்டுதலின்படி உரிய மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் செய்தார். பின்னர் அவர் தனது சொந்த செலவில் வேலூர் பாலாறு இடுகாட்டில் வேலூர் ஜேம்ஸ் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் தருண் கிருஷ்ணகுமார் அவர்களின் உதவியுடன் நல்லடக்கம் செய்தார்.
முதியவரின் சடலம் நல்லடக்கம் செய்ய அரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜனார்த்தனம் அவர்கள் கோபிநாத்துக்கு உரிய சான்றுகளை வழங்கி உதவியாக இருந்தார் .
கண் தானம் உடல் உறுப்பு தானம் ரத்த தானம் செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக